ADDED : ஏப் 01, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் மார்ச் 29ல் நடந்தது.
அன்று ஊருக்குள்ளும் கிரிவல பாதையிலும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், தண்ணீர் வழங்கப்பட்டது. பக்தர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பை தென்பரங்குன்றம் பகுதி முழுவதும் குவிந்து கிடந்தன. அதை பரியாவரன் சன்ரக்சன் கதிவிதி சுற்றுப்புறச்சூழல் இயக்கம், பூ கலாசார மையம் சார்பில் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சதீஷ்பாபு ஆகியோர் அகற்றி சுத்தம் செய்தனர்.

