நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் செல்லப்பாண்டி 31, அரிசிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சோழவந்தான் அருகே உள்ள ஒரு வாடிக்கையாளர் வீட்டிற்கு அரிசி மூடை இறக்குவதற்காகச் சென்றார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி கூச்சலிடவே தப்பினார். சமயநல்லுார் மகளிர் போலீசார் செல்லபாண்டி மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனர்.