நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண் செவிலியர் பலி
மதுரை: துாத்துக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 41. மனைவி, 3 மகள்கள் உள்ளனர். ஆண் செவிலியராக இருந்தார். ஒத்தக்கடை - மேலுார் இடையே கொடிக்குளம் சந்திப்பில் ரோட்டை கடந்தபோது அவ்வழியே வந்த லாரி மோதி இறந்தார். ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
இளைஞர்கள் மீது வழக்கு
மதுரை: சாமநத்தத்தில் நேற்றுமுன்தினம் இளைஞர்கள் சிலர் போதையில் அப்பகுதி வாகனங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பாக விக்னேஷ் 22, வினோத்குமார் 20, வசந்த் 19, தினேஷ் 18, ஆகியோர் மீது சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.