sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : மார் 05, 2025 05:44 AM

Google News

ADDED : மார் 05, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலை வைத்து தற்கொலை

திருப்பரங்குன்றம்: நிலையூர் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் 24 வயது நபர் இறந்து கிடந்தார். எஸ்.ஐ. கேசவன் விசாரணையில், இறந்தவர் மேல அனுப்பானடி அம்பேத்கார் நகர் கண்ணன் மகன் மணிகண்டன் எனத்தெரிந்தது. இருவரும் கொத்தனார்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

மூடைக்குள் பெண் உடல்

பெருங்குடி: விமான நிலையம் செல்லும் ரோட்டில் ஈச்சனேரி பகுதி முட்புதரில் துர்நாற்றத்துடன் சாக்கு மூடை கிடந்தது. அதில் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. மார்பு பகுதியில் இரண்டு காயங்கள் இருந்தன. முகம் முழுவதும் சேதமடைந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்தில் விசாரித்தார்.

கொத்தனார் பலி

பேரையூர்: சந்தையூர் இந்திரா காலனி காளிமுத்து 32. கொத்தனார். நேற்று முன்தினம் இரவு பேரையூரில் இருந்து சந்தையூருக்கு டூவீலரில் எஸ்.கீழப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மண் அள்ளும் இயந்திரம் மோதியதில் இறந்தார். டிரைவர் எஸ்.கீழப்பட்டி முத்துக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us