நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெரு மாரியம்மன்கோயில் பொங்கல் விழா நடந்தது. முதல் நாள் பக்தர்கள் மாவிளக்கு வைத்தனர். இரவு சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது.
இரண்டாம் நாள் முளைப்பாரி ஊர்வலம், மூன்றாம் நாள் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது.

