ADDED : மார் 25, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் பகுதியில் சில நாட்களாக வெயில் அதிகரிப்பால் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது.
சர்பத் போன்ற குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை தேவை அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ. 90க்கு விற்ற எலுமிச்சை, தற்போது ரூ. 200க்கு விற்கிறது. இதனால் சர்பத்தின் விலையும் ரூ.15 லிருந்து ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. எலுமிச்சை பழச்சாறு விலை ரூ. 30 வரை விற்கிறது.

