sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்

/

கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்

கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்

கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்


ADDED : செப் 06, 2024 05:11 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், சம்பள பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பல்கலையில் நிதிநெருக்கடியால் 2 மாதமாக பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால் வருவாயை அதிகரிக்கவும், சம்பள பிரச்னையை தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பணிபுரிவோர் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதை கண்டித்து பதிவாளர் அறைமுன் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், நேற்று ஆசிரியர் தினத்தில் கருப்பு பட்டை அணிந்து பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். பேராசிரியர்கள் கணேஷ், ஆனந்த், முருகேசன் பேசினர்.

பேராசிரியர்கள் கூறியதாவது: சம்பளம் இல்லாததால் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். ஆனாலும் மாணவர்கள் வகுப்பு பாதிக்காத வகையில் மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை தினம் தொடர் மற்றும் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டமாக நடத்த முடிவு செய்துஉள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us