sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தனிநபர் பிரச்னைக்கு பொதுநல வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

/

தனிநபர் பிரச்னைக்கு பொதுநல வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

தனிநபர் பிரச்னைக்கு பொதுநல வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

தனிநபர் பிரச்னைக்கு பொதுநல வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி


ADDED : ஆக 27, 2024 01:53 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம் மேலுார் அருகே தனியாமங்கலம் தர்மலிங்கம். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தனியாமங்கலம் தென்பள்ளம் தென்தென்கரை தெரு வார்டு 3ல் பொதுப்பாதையை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அகற்றக்கோரி கலெக்டர், மேலுார் ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள அந்த இடம் வருவாய்த்துறை பதிவேடுகளில் ரயத்வாரி புஞ்சை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் பெயரில் பட்டா உள்ளது. பாதை மீது ஏதேனும் மனுதாரருக்கு உரிமை இருந்தால் சிவில் நீதிமன்றத்தில் தீர்வு காணலாம். தனிநபர்களிடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண இதுபோல் பொதுநல வழக்கு வடிவில் தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us