நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அய்யர் பங்களா இ.பி.காலனி பகவத்நாம சத்சங்கம் சார்பில் 31வது ஆண்டு சீதா கல்யாண மகோத்ஸவம் பார்க் டவுன் வைதீக சமாஜத்தில் ஆக.17 துவங்குகிறது.
அன்று காலை 8:30 மணிக்கு தோடயமங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதியும் இரவு தீப பிரதட்சணம், டோலோத்ஸவம் நடக்கின்றன. ஆக.18 காலை 8:30க்கு உஞ்சவிருத்தி, மாப்பிள்ளை அழைப்பும் தொடர்ந்து காலை 9:30க்கு மேல் 1:30 மணிக்குள் சீதாராதா கல்யாண உற்ஸவமும் நடக்கின்றன.
ஏற்பாடுகளை ஆர்.மீனாட்சி சுந்தரம் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.