/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகளிர் ஸ்டேஷன் முன் உறவினர்கள் மல்லுக்கட்டு
/
மகளிர் ஸ்டேஷன் முன் உறவினர்கள் மல்லுக்கட்டு
ADDED : ஜூன் 27, 2024 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் செல்லம்பட்டி, கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன், 30. காஷ்மீரில் ராணுவவீரராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ரேவதியை 26, காதலித்தார். கர்ப்பமான ரேவதியை மிரட்டி கருவை கலைத்தார். திருமணம் செய்ய மறுப்பதாக உசிலம்பட்டி மகளிர் ஸ்டேஷனில் கடந்த ஜனவரியில் ரேவதி புகார் அளித்தார்.
நேற்று விசாரணைக்கு ஆஜரான ராமனை கைது செய்து கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச்சென்றபோது ஸ்டேஷன் முன் இருதரப்பு உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.