தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோடு பணி தாமதம்: மறியலில் மக்கள்

ரோடு பணி தாமதம்: மறியலில் மக்கள்

ரோடு பணி தாமதம்: மறியலில் மக்கள்


ADDED : மே 14, 2024 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 22 அண்ணாநகர் தெருவில் சிமென்ட் ரோடு அமைப்பதற்காக ரோட்டை தோண்டி ஆறுமாதங்களாக பணியை கிடப்பில் போட்டனர்.

ரோட்டையும், கழிவு நீர் கால்வாயையும் சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள், வார்டு கவுன்சிலர் லின்சி, ஓ.பி.எஸ்., அணி நகர் செயலாளர் சசிக்குமார் இணைந்து பேரையூர் ரோட்டில் முட்செடிகளை போட்டு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

நகராட்சி பொறியாளர் பட்டுராஜன், உசிலம்பட்டி போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் ரோடு சீரமைத்து தரப்படும் என சமாதானம் செய்தனர். மறியலால் காலை 10:40 முதல் 11:00 மணிவரை 20 நிமிடங்கள் பேரையூர் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us