sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

/

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்


ADDED : ஜூலை 09, 2024 05:28 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துவக்க விழா


திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப்பிரிவு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 'ப்ளூ பிரைன் கிளப்' துவக்க விழா நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். கிளப் செயல்பாடுகள் குறித்து துறை தலைவர் கார்த்திகா பேசினார். கிளப் ஜனாதிபதியாக இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் கீர்த்திவாசன், துணை ஜனாதிபதியாக யோகராஜ், செயலராக சவுமியா, துணை செயலராக நரசிம்மராஜா, பொருளாளராக தீபக் நியமிக்கப்பட்டனர். பேராசியர்கள் சுஜித்ரா, வனிதா பேசினர். மாணவர் இன்பராஜ் நன்றி கூறினார்.

ஆலய பிரவேச நினைவு நாள்


மதுரை: மீனாட்சியம்மன் கோயில் பிரவேச நினைவு நாளின் 85 வது ஆண்டு விழா மீனாட்சி அரசு கல்லுாரியில் நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் சந்திரா வரவேற்றார். முதல்வர் வானதி தலைமை வகித்தார். காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் பேசுகையில், இந்தியாவிலேயே முதன்முதலில் தடையை மீறி ஒடுக்கப்பட்டோர் கோயிலுக்குள் சென்ற இடம் மதுரை தான். இக்கல்லுாரி வளாகத்தில் உள்ள சிவகங்கை அரண்மனையில் காந்தி தங்கி இருந்தது வரலாற்று நிகழ்வு என்பதால் அந்த அரண்மனையை பாதுகாக்க வேண்டும்'' என்றார் . மியூசிய பொருளாளர் செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர். கணிதத்துறை தலைவர் முத்துபாண்டியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us