ADDED : மே 07, 2026 04:41 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஆழ்வார்புரம் சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கான இலவச கோடைகால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
சமூக ஆர்வலர் அசோக்குமார் விதைப்பந்து செய்யும் செய்முறையை விளக்கினார். 750 விதைப்பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர். தாளாளர் சரவணன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் செந்தில்குமார் செய்திருந்தார்.
