ADDED : ஜூலை 17, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் ஆங்கிலத் துறை சார்பில், தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் சூழலில் இலக்கியம், ஆங்கில மொழி கற்பித்தல் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் அல்லி முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் கோமதி வரவேற்றார். ஓமன் டாக்டர் ஜஸ்டின், இலங்கை சபரகமுவா பல்கலை உதவிப் பேராசிரியர் ரோஹன் அபிவிக்ரமா பேசினர். பல்வேறு நாடுகளின் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
