நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் உலகப் பல்கலைக்கழகச் சேவை மைய துவக்க விழா நடந்தது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் குபேந்திரன் வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்து பேசினார். அகத்தர மதிப்பீட்டுக் குழு துணைத்தலைவர் சிவக்குமார் 'உலகப் பல்கலையின் நோக்கமும் செயல்பாடுகளும்' என்னும் தலைப்பில் பேசினார். ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். திரளான மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.