sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கழிவுநீர் நிரம்பி நோய் பரப்பும் நீர்நிலைகள்

/

கழிவுநீர் நிரம்பி நோய் பரப்பும் நீர்நிலைகள்

கழிவுநீர் நிரம்பி நோய் பரப்பும் நீர்நிலைகள்

கழிவுநீர் நிரம்பி நோய் பரப்பும் நீர்நிலைகள்


ADDED : ஜூன் 17, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியின் 24 வார்டுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் நீர்நிலைகளில் சேர்ந்து மாசுபடுத்தி வருகிறது.

உசிலம்பட்டி நகராட்சியில் மாமரத்துப்பட்டி, அருணாசலம்பட்டி, கருக்கட்டான்பட்டி பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் உசிலம்பட்டி கண்மாயில் கலக்கிறது. அன்னம்பாரிபட்டி பகுதியில் சேரும் கழிவுநீர் அங்குள்ள வண்ணான் ஊருணி, நீராலி ஊருணியில் சேர்கிறது.

வில்லாணிச்சாலை, பேரையூர் ரோடு, கவண்டன்பட்டி ரோடுகளில் சேரும் கழிவுநீர் கவண்டன்பட்டி ஊருணிகளில் கலக்கிறது. மதுரை ரோடு பகுதி தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டின் இரு பக்கங்களின் வழியாக கொங்கபட்டி ஊருணி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி அருகில் உள்ள ஊருணிகளில் கலக்கிறது.

மழைக்காலத்தில் கழிவுநீர் செல்லும் வழியில் அடைப்புகள் ஏற்பட்டு, தேங்கி குடியிருப்பு பகுதிக்குள்ளும், தெருக்கள், ரோடுகளிலும் தேங்கி சுகாதாரக்கேடை ஏற்படுத்துகிறது.

கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us