ADDED : ஜூன் 24, 2026 07:41 PM
மதுரை: டி.கல்லுப்பட்டியில் வளர்ச்சியடைந்த பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் சார்பில் சமூக தணிக்கைத் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மையத்தில் 2 நாட்கள் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதிஉதவியுடன் பயிற்சி நடந்தது. மாநில இணை இயக்குனர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவன உதவிஇயக்குனர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். விருதுநகர் வளபயிற்றுனர் மணி வரவேற்றார்.
முதன்மை பயிற்றுனர்கள் கவுஸ்கான், சுந்தரராஜன், சரிதா, முத்துக்குமரன், மாதர் செல்வி, பி.டி.ஓ., ராமமூர்த்தி, குறைதீர்ப்பாளர் காயத்ரி, உதவிப்பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை வளபயிற்றுனர் அப்துல்காதர் ஜெய்லானி நன்றி கூறினார்.
