ADDED : செப் 02, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : எட்டிமங்கலம் கிராமத்தின் மையப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே இருபது ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாமல் இத்தொட்டி சேதமடைந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஊராட்சி செயலர் பிரபு தொட்டியை மராமத்து பணியை மேற்கொண்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.