ADDED : செப் 08, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சதங்கை அகாடமி, பதஞ்சலி யோகா சார்பில் தென்மாவட்ட அளவிலானயோகா போட்டிகள் மதுரையில் நடந்தது.
பாதிரியார் அலெக்ஸ் ஞானராஜ் துவக்கி வைத்தார். திருவாதவூர் லட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
ஜூனியர், சீனியர் பிரிவுகளில் தியா ஸ்ரீ, ப்ரீத்தி, சஸ்விதா ஸ்ரீ, தன்சிகா, தயாநிதி, தர்ஷன், வர்ஷனா, திருவேல்ராஜன், விதாசினி ஆகியோர் முதல் பரிசு வென்றனர்.
வெற்றி பெற்றவர்களை தாளாளர்கள் திருஞானசம்பந்தம், திருநாவுக்கரசு, தலைமையாசிரியை ரேணுகாதேவி, பயிற்சியாளர் ராஜா பாராட்டினர்.