sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குற்றத்தை தடுக்க சிறப்பு கவனம் தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி

/

குற்றத்தை தடுக்க சிறப்பு கவனம் தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி

குற்றத்தை தடுக்க சிறப்பு கவனம் தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி

குற்றத்தை தடுக்க சிறப்பு கவனம் தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி


ADDED : ஜூலை 18, 2024 06:27 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தென்மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என தென்மண்டல ஐ.ஜி.,யாக நேற்று பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.

இங்கிருந்த ஐ.ஜி., கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் மதுரையில் பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியதாவது:

தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு, ஜாதி ரீதியிலான பிரச்னை வராமல் தடுக்கப்படும். முன்விரோத கொலைகள் நடக்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க ஏற்கெனவே உள்ள நடவடிக்கை தொடரும். இதுதொடர்பான நிலுவை வழக்குகளை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டோருக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும். நகர்ப்புறம், கிராமங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும். நகர் பகுதி, நான்கு வழிச்சாலைகளில் விபத்துக்களை குறைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். நான்கு வழிச்சாலைகளில் 4 முனை சந்திப்பு பகுதியில் விபத்து தடுப்பதற்காக வைக்கப்படும் இருப்புத் தடுப்புகள் (பேரிகார்டு) முறைப்படுத்தப்படும்.

குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் அளிக்க வருவோரை இன்முகத்துடன் வரவேற்று உரிய உதவி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு வரவேற்பாளர்கள் அதிக கவனம் செலுத்த அறிவுறுத் தப்படும்.

தென்மாவட்டத்திலுள்ள ரவுடிகள் குறித்த தகவல்கள் உள்ளன. இதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக அவர் மதுரை, ராமநாதபுரம் டி.ஐ.ஜி., துரை, திண்டுக்கல் டி.ஐ.ஜி. அபினவ் குமார், மதுரை எஸ்.பி., அரவிந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.






      Dinamalar
      Follow us