ADDED : மே 09, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அரசு கல்லுாரியில் வன கிரிக்கெட் கால், கையுந்து பந்து உள்ளிட்ட 14 போட்டிகள் மற்றும் நுண்கலை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் கிறிஸ்டல் ஜீவா வரவேற்றார். முதல்வர் அந்தோணி செல்வராஜ் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி விளையாட்டறிக்கை வாசித்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். போட்டி ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலன், பேராசிரியர்கள், உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி மங்கயைர்கரசி நன்றி கூறினார்.