ADDED : ஜூலை 13, 2024 04:44 AM
அ நிறம் | அளவு
மேலுார் : பட்டூரில் 7 நாட்கள் குடிநீர் வராததால் மக்கள் சிரமப்பட்டனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் சரி செய்யாததால் நேற்று காலை காலி குடங்களுடன் மேலுார் ---- நத்தம் ரோட்டில் 45 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. ஒன்றிய அதிகாரி பூபதி மற்றும் போலீசார் உடனடியாக தண்ணீர் சப்ளை செய்வதாக உறுதிஅளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
