ADDED : செப் 02, 2024 01:23 AM

அ நிறம் | அளவு
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில கைப்பந்து போட்டியில் 2ம் இடம் பெற்று அசத்தினர்.
கடலுாரில் ஆக. 26 முதல் 29 வரை நடந்த 14 வயதுக்குட்பட்ட மாநில கைப்பந்து போட்டியில் 2ம் இடம் பிடித்த மாணவியரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை வாழ்த்தினார். தலைமை ஆசிரியர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர்களை பாராட்டினார்.
