/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறநிலையத்துறை இணைகமிஷனருக்கு எதிராக பொய்யான பாலியல் புகார் 'சஸ்பெண்ட்' செயல் அலுவலர் கைது
/
அறநிலையத்துறை இணைகமிஷனருக்கு எதிராக பொய்யான பாலியல் புகார் 'சஸ்பெண்ட்' செயல் அலுவலர் கைது
அறநிலையத்துறை இணைகமிஷனருக்கு எதிராக பொய்யான பாலியல் புகார் 'சஸ்பெண்ட்' செயல் அலுவலர் கைது
அறநிலையத்துறை இணைகமிஷனருக்கு எதிராக பொய்யான பாலியல் புகார் 'சஸ்பெண்ட்' செயல் அலுவலர் கைது
ADDED : ஆக 15, 2024 05:26 AM

மதுரை : மதுரை மண்டல ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை மீது21 பெண் அலுவலர்களின் பெயர்களில் பொய்யான பாலியல் புகாரை தெரிவித்ததாக 'சஸ்பெண்ட்' செயல் அலுவலர் ஜவஹர் 60, கைது செய்யப்பட்டார்.
மதுரை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. சில நாட்களுக்கு முன் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 21 பெண் அலுவலர்களின் பெயர்களுடன் புகார் கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலராக இருந்த ஜவஹருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
நிர்வாக காரணங்களுக்காக இவரை செல்லத்துரை 'சஸ்பெண்ட்' செய்ததால், பணி ஓய்வு பெற முடியவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ஜவஹர், சக பெண் அலுவலர்கள் 21 பேரை குறிப்பிட்டு கடிதம் தயார் செய்தார். கையெழுத்து அடிப்படையில் உறுதி செய்யப்பட்டு ஜவஹர் மீது மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் செல்லத்துரை புகார் அளித்தார். 21 பெண் அலுவலர்களும் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் ஜவஹர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தல், மோசடியாக ஆவணங்களை தயார் செய்தல் உட்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.