ADDED : மார் 11, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு அருகே 66எம்.பள்ளபட்டியில் மார்நாடு பெரிய கருப்புசாமி, சின்ன கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
மார்ச் 9ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் காலயாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.