ADDED : ஜூலை 09, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது.
கமிஷனர் அசோக்குமார், இன்ஜினியர் ரத்தினவேலு முன்னிலை வகித்தனர்.
புதிய குடிநீர் இணைப்புகளுக்காக பைப் லைன் பதிக்கும் வேலைகளை விரைவுப்படுத்துவது, தண்ணீர் விநியோகத்தை தட்டுப்பாடின்றி வழங்குவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.