நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சுயநிதி பிரிவு காம் கேப்ஸ் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி., படிவங்கள் சமர்ப்பிக்கும் முறை என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மில்டன் அறக்கட்டளை கணக்குகள், உள் தணிக்கையாளர் எர்ரம்மாள் தேவி பேசினார்.
மாணவி சுகிதா வரவேற்றார். மாணவி சிந்து அறிமுக உரையாற்றினார். மாணவி கீர்த்திகா நன்றி கூறினார். துறைத் தலைவர் நாகசுவாதி, பேராசிரியர்கள் ராஜா மணி, மஞ்சுளா, பாரதி ஒருங்கிணைத்தனர்.