ADDED : மே 09, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அடுத்த தர்மராஜன் கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சுவாமிக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மே 22 காலை 6:00 மணி முதல் மவுனகுருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், பூக்குழி இறங்கி 3 கி.மீ., துாரம் நடந்து வந்து சுவாமிக்கு பாலபிஷேகம் செய்வர். மே 23 மாலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து முளைப்பாரி சீர்வரிசையுடன் பட்டு பல்லக்கும், மே 24 பூப்பல்லக்கும் நடக்கிறது.