/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புறப்பட்டது வந்தே பாரத் ரயில்: மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்
/
புறப்பட்டது வந்தே பாரத் ரயில்: மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்
புறப்பட்டது வந்தே பாரத் ரயில்: மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்
புறப்பட்டது வந்தே பாரத் ரயில்: மதுரை - பெங்களூரு சோதனை ஓட்டம்
ADDED : ஜூன் 18, 2024 06:25 AM

மதுரை : மதுரையிலிருந்து பெங்களூரு வரையிலான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
அதிகாலை 5:15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் சோதனை ஓட்டம் ரயில், திண்டுக்கல்லுக்கு அதிகாலை 5:58க்கு சென்றடைந்தது. காலை 6:00 மணிக்கு அங்கிருந்து கிளம்பி, 7:10க்கு திருச்சி, அங்கிருந்து 7:15க்கு புறப்பட்டு, 8:18 மணிக்கு கரூர் சென்றடைந்தது.
அங்கிருந்து 8:20க்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி.டி., சென்றடைந்தது.
இச்சோதனை ஓட்டத்தில், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், இயந்திர பொறியாளர்கள் பங்கேற்றனர். இந்த ரயில், திண்டுக்கல், கரூர், ஜோலார்பேட்டையில் நிற்காது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.