sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வந்தே பாரத் ரயிலில் சுதந்திர போராட்ட வீரர்

/

வந்தே பாரத் ரயிலில் சுதந்திர போராட்ட வீரர்

வந்தே பாரத் ரயிலில் சுதந்திர போராட்ட வீரர்

வந்தே பாரத் ரயிலில் சுதந்திர போராட்ட வீரர்


ADDED : செப் 03, 2024 04:40 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை -- பெங்களூரு வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் 101 வயது சுதந்திரப் போராட்ட வீரர் அழகம்பெருமாள் கலந்து கொண்டார்.

மதுரை -- பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் சேவை ஆக.31ல் துவக்கப்பட்டது. இச்சேவையை பிரதமர் மோடி வீடியோகான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நடந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் வி. சோமண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ரயிலில் பேரையூரைச் சேர்ந்த 101 வயது சுதந்திர போராட்ட வீரர் அழகம்பெருமாளும் கலந்து கொண்டார்.

பேரையூர் தாலுகா டி.கிருஷ்ணாபுரத்தில் பிறந்தவர். 1942ல் மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே ஆகஸ்ட் புரட்சியில் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றவர்.

இதனால் 6 மாதங்கள் பெல்லாரி அல்லிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ் ஆர்வலரான அழகம்பெருமாள், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி விழாவில் 1330 திருக்குறளையும் 1.40 மணி நேரத்தில் ஒப்பித்து சாதனை புரிந்தார். திருக்குறளில் 'நவரசம்' எனும் தலைப்பில் 120 பக்கத்தில் ஆய்வுக் கட்டுரையை மதுரை உலக தமிழ்ச்சங்கம் மூலமாக தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளார். திருக்குறளில் உள்ள 1300 க்கும் மேற்பட்ட பழந்தமிழ்ச் சொற்களுக்கு பொருள் எழுதியுள்ளார்.






      Dinamalar
      Follow us