sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டி அகற்றம்; வேலம்மாள் மருத்துவமனை சாதனை

/

நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டி அகற்றம்; வேலம்மாள் மருத்துவமனை சாதனை

நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டி அகற்றம்; வேலம்மாள் மருத்துவமனை சாதனை

நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டி அகற்றம்; வேலம்மாள் மருத்துவமனை சாதனை


ADDED : செப் 05, 2024 04:11 AM

Google News

ADDED : செப் 05, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூத்த நுரையீரல் நிபுணர் டாக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்த கட்டி 'ப்ரோன்கோஸ் கோபி' மூலம் அகற்றப்பட்டது.

டாக்டர் பிரேம் ஆனந்த் கூறியதாவது: வேலம்மாள் மருத்துவமனையின் சுவாச மருத்துவப் பிரிவில் 50 வயது பெண் இருமல், சுவாசிப்பதில் சிரமம், இருமும் போது ரத்தம் வெளியேறிய நிலையில் அனுமதிக்கப்பட்டார். 'ப்ரோன்கோஸ்கோபி' பரிசோதனையில் மூச்சுக்குழாயில் கட்டி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அந்த கட்டி 'எலக்ட்ரோகாட்டரி ஸ்னாரிங்' செயல்முறை மூலம் 'பிளெக்ஸிபில் ப்ரோன்கோஸ்கோபி' முறைப்படி அகற்றப்பட்டது.

உடனடியாக அவருக்கு மூச்சுக்குழாயில் ரத்தப்போக்கு நிற்பதற்குமயக்கவியல் நிபுணர் மணிகண்டன் உதவியோடு 'ஆர்கான் பிளாஸ்மா கோகுலேஷன்' சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மற்ற அறுவை சிகிச்சைக்கு மூச்சுக்குழாய் வழியாக மயக்க மருந்து கொடுக்கப்படும்.

மூச்சுக்குழாயில் செய்யப்படும் செயல்முறை சிக்கலானது. 'பிளெக்ஸிபில் ப்ரோன்கோஸ்கோபி' சிகிச்சையில் ஆக்சிஜன் மற்றும் மயக்க மருந்து மூலம் வரும் வாயுக்கள் இரண்டும் நிர்வகிக்கப்பட வேண்டும்.

மேலும் மூச்சுக்குழாய் கட்டியை அகற்ற குறுகிய இடமே இருக்கும். தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்யப்பட்டது என்றார்.






      Dinamalar
      Follow us