ADDED : செப் 03, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது: ஆந்திர மாநில கோயில்களில் வேற்று மதத்தினர் இருக்கக் கூடாது. கட்டாய மதமாற்ற நடவடிக்கைகள் கூடாது. அர்ச்சகர்களுக்கு சம்பளம் உயர்வு என பல்வேறு அறிவிப்புகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.
தமிழகத்திலும் தி.மு.க., அரசு ஓட்டு வங்கி அரசியலை கைவிட்டு எல்லா மதத்தினரையும் சமமாக கருத வேண்டும். கோயில் நிலங்களை மீட்க வேண்டும். கட்டாய மதமாற்றம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கிராம கோயில்களில் தினசரி 6 கால பூஜை நடக்க நிதி வழங்க வேண்டும். கோயில் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.