ADDED : ஜூலை 08, 2024 06:19 AM

அ நிறம் | அளவு
மேலுார் : மேலுார் தபால் நிலையத்தில் ஆதார் எடுக்க நாள் கணக்கில் மக்கள் காத்து கிடப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.
பயனாளி காஞ்சி: குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஆதார் எடுக்கின்றனர். ஆட்கள் இல்லை என போஸ்ட் மாஸ்டர் கூறுகிறார். ஆதார் எடுத்தவர்கள் தவிர மீதமுள்ளவர்கள் டோக்கன் கேட்டால் கொடுக்க மறுக்கின்றனர்.
மறுநாள் வரச்சொல்வதால் அலைக்கழிக்கப்படுவதோடு, நேரம் பணம் விரையமாகிறது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கும், மற்றவர்கள் வேலைக்கும் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். அதனால் பள்ளிகளில் ஆதார் முகாமிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தபால் நிலையத்தில் கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும் என்றார்.
