sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜல்லி பரப்பியாச்சு தார் ரோடு என்னாச்சு

/

ஜல்லி பரப்பியாச்சு தார் ரோடு என்னாச்சு

ஜல்லி பரப்பியாச்சு தார் ரோடு என்னாச்சு

ஜல்லி பரப்பியாச்சு தார் ரோடு என்னாச்சு


ADDED : ஏப் 28, 2024 04:00 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : முக்கம்பட்டியில் ஜல்லி பரப்பி மூன்று மாதமாகியும் தார் ரோடு அமைக்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.

ஆமூர் ஊராட்சி முக்கம்பட்டியில் திருவாதவூர், மதுரை செல்ல ஒரு ரோடு தான் உள்ளது. 15 ஆண்டுகளாக ரோடு அமைக்கவில்லை.

மக்கள் தொடர்ந்து மனு கொடுத்ததை தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் பரப்பினர். இதுவரை ரோடு அமைக்கவில்லை.

மக்கள் கூறியதாவது: ஜல்லிகற்கள் மீது நடப்பதால் காலில் காயம் ஏற்படுகிறது. டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். கற்கள் குத்தி டயர் பஞ்சராக வாய்ப்புள்ளதால் பல கி.மீ., துாரம் வயல் வெளியில் சுற்றிச் செல்கிறோம். ஆம்புலன்ஸ், ஆட்டோ ஊருக்குள் வர மறுக்கின்றன என்றனர்

ஊராட்சி தலைவி பாண்டீஸ்வரி கூறுகையில்,ஓரிரு நாளில் ரோடு அமைக்கும் பணி துவங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us