sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கார் டயர் வெடித்து பெண் பலி; கணவர், மூவர் படுகாயம்

/

கார் டயர் வெடித்து பெண் பலி; கணவர், மூவர் படுகாயம்

கார் டயர் வெடித்து பெண் பலி; கணவர், மூவர் படுகாயம்

கார் டயர் வெடித்து பெண் பலி; கணவர், மூவர் படுகாயம்


ADDED : ஜூன் 17, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூன் 17, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : மதுரை திருநகரில் வசித்து வருபவர் ரமேஷ், 57, விருதுநகர் மாவட்ட வேளாண்மை விற்பனை பிரிவு இணை இயக்குனர்.

இவரது மனைவி மனைவி ஜெனுவா இவாஞ்சலின், 55, மதுரை அமெரிக்கன் கல்லுாரி ஏ.சி.ஆர்., மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை.

நேற்று முன்தினம் இரவு, சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூருக்கு குடும்பத்துடன் சென்றனர்; நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மதியம் 2:30 மணிக்கு திருச்சுழி அருகே கமுதி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காரின் முன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஜெனோவா இவாஞ்சலின் பலியானார்.

இவருடன் காரில் பயணித்த கணவர் ரமேஷ், நரிப்பையூரைச் சேர்ந்த ஜோஷ்னா, 15, ராஜநாயகம், 65, மதுரையைச் சேர்ந்த மெர்சடைஸ் ரோட்டரிக்கல்ஸ், 28, ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள், நான்கு பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். தகவல் தெரிவிக்கப்பட்டும், 3 மணி நேரம் கழித்து வந்த அமரர் ஊர்தியில் பலியானவர் உடலை எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us