ADDED : ஏப் 28, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம், : தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் சங்க மதுரை மாவட்டக் கிளை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் மதுரை மாவட்டக் கிளை சார்பில் அவனியாபுரத்தில் உலக கால்நடை மருத்துவ தினம் நடந்தது.
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் நடராஜ்குமார் தலைமை வகித்தார். தென்மண்டல ஐ.ஜி., கண்ணன் துவக்கி வைத்தார்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி சிகிச்சையியல் துறை பேராசிரியர் டாக்டர் சிவராமன், கோடை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பு முறை, சிகிச்சை வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

