sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வெண்டைக்காய் விலை இல்லாததால் கவலை

/

வெண்டைக்காய் விலை இல்லாததால் கவலை

வெண்டைக்காய் விலை இல்லாததால் கவலை

வெண்டைக்காய் விலை இல்லாததால் கவலை


ADDED : செப் 02, 2024 06:14 AM

Google News

ADDED : செப் 02, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் சாகுபடி செய்துள்ள வெண்டைக்காய்க்கு நல்ல மகசூல் கிடைத்த போதிலும், போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: கிணற்றுப் பாசன நிலத்தில், நவீன ரக வெண்டையை சாகுபடி செய்கிறோம். 45வது நாளில் காய்க்க துவங்கும்.

தினமும் அதிகாலையில், ஆட்கள் மூலம் வெண்டைக் காயை பறிப்போம். வெண்டைச் செடியை பூச்சி தாக்காமல், மருந்து வைத்து நன்கு பராமரித்தால், தொடர்ந்து நான்கு மாதங்கள் காய்க்கும். 50 சென்ட் நிலத்தில் ஒரு நாளில் 40கிலோ வெண்டை மகசூல் கிடைக்கிறது.

ஆனால் நல்ல விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோ வெண்டைக் காய் ரூ.6 முதல் 8 ரூபாய் வரை விற்கிறது.

பறிப்பு கூலிக்குக் கூட விலையில்லை. இதனால் பலர் வெண்டையை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனர் என்றனர்.






      Dinamalar
      Follow us