ADDED : மார் 19, 2024 06:07 AM

அ நிறம் | அளவு
மதுரை : மதுரை காமராஜர் ரோடு சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி அருகே உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., விஜயகார்த்திக்ராஜா உத்தரவுபடி டி.எஸ்.பி., ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., முத்துராஜா உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சரக்கு ஆட்டோவை சோதனையிட்ட போது 1050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக தெப்பக்குளம் கார்த்திகேயனை 29, கைது செய்தனர். உணவுப்பொருள் கடத்தல் தொடர்பாக 1800 599 5950 என்ற இலவச எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
