ADDED : பிப் 08, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில், '108' ஆம்புலன்ஸ் தொழி லாளர்கள் 7000 பேருக்கு ஜனவரிக்குரிய சம்பளம் வழங்கப்படாதது குறித்து அமைச்சர் சுப்பிர மணியனிடம் '108' ஆம்புலன்ஸ் தொழி லாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி மனு அளித்தார்.
அவர் கூறியதாவது:
2024ல் வழங்கிய 16 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வை 2025ல் 10 சத வீதமாக அரசு குறைத்தது. 8 மணி நேரம் கடந்தும் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத்துகின்றனர். 4 மாதங்களாக சம்பளத்தை பாதி பாதியாக பிரித்து வழங்கினர். ஜனவரிக் குரிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
முதல்வர் புகார் மையத்திற்கு 4000 பேர் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. பிப்.13ல் பேரணி யாக செல்ல திட்ட மிட்டுள்ளோம் என்றார்.

