ADDED : நவ 11, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே மஞ்சம்பட்டியில் தனியார் ரிசார்ட் ஒன்றில்விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் வார விடுமுறை நாளை முன்னிட்டு சிலர் போதை பொருட்கள் உபயோகத்துடன் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 12 பெண்கள் உட்பட 28 பேரை கைது செய்தனர்.
போதைப் பொருள் சப்ளை செய்தது யார், பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.