/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
162 கிலோ புகையிலை: தாய், மகன் கைது
/
162 கிலோ புகையிலை: தாய், மகன் கைது
ADDED : மே 20, 2025 10:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: உசிலம்பட்டி, எழுமலை, எம்.கல்லுப்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது. ரூ. 10 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டை ரூ.60, ரூ.70க்கு விற்கின்றனர்.
நேற்று எம்.கல்லுப்பட்டி பகுதியில் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார் கோவிந்தசாமி மனைவி தெய்வம் 55, வீட்டில் 162 கிலோ புகையிலையை பறிமுதல் செய்து, அவரையும், மகன் பிரபுகுமாரரையும் 32, கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு எழுமலை போலீஸ் ஸ்டேஷன் அருகில் 99 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.