/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குவாரி நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
/
குவாரி நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
ADDED : ஆக 11, 2025 02:40 AM
மதுரை:மதுரை, நரிமேடு பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் புகாரி கான். இவரது மகள் சையது அலி சஹானா, 9, மகன் சபீர், 4. குழந்தைகள் இருவரும் விடுமுறையில் கருப்பாயூரணி பாண்டியன் கோட்டையில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றனர்.
நேற்று மதியம், சஹானா தன் தம்பியுடன் அதே பகுதியை சேர்ந்த பெரியப்பா சுல்தான் மரைக்கானின் மகன் ஆஷிக் ராஜா, 3, மகள் ஆயிஷா, 9, ஆகியோருடன் அருகில் உள்ள கல் குவாரிக்கு விளையாட சென்றார்.
குவாரி நீரில் குளிப்பதற்காக நால்வரும் இறங்கினர். எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிய ஆஷிக் ராஜாவை காப்பாற்ற மற்றவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதில், ஆஷிக் ராஜா, சையது அலி சஹானா நீரில் மூழ்கி இறந்தனர்.
விளையாட சென்ற குழந்தைகளை காணவில்லை என தேடிய ஆஷிக் ராஜாவின் தாய் பாத்திமா, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆயிஷா, சபீரை காப்பாற்றினார். அருகில் இருந்தவர்கள், இரு குழந்தைகளின் உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.