ADDED : பிப் 11, 2026 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைக்கான சங்கத்தினர் உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாநில துணைத்தலைவர் தவமணி, மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
நிர்வாகிகள் ராஜேஸ்வரி, சின்னச்சாமி, நாகராஜ், பழனியம்மாள், மகாலிங்கம், மா.கம்யூ., பொதுக்குழு உறுப்பினர் முத்துராணி, ஒன்றியச் செயலாளர் ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 270 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

