/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்டேஷன் முன் மறியல் 30 பெண்கள் கைது
/
ஸ்டேஷன் முன் மறியல் 30 பெண்கள் கைது
ADDED : ஜூலை 06, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை:எழுமலையில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் வழிபாடு கருத்துவேறுபாட்டால் கிழக்குத்தெரு, வடக்குத்தெரு என இரு பிரிவாக உள்ளனர்.
முன்பகையால் ஜூலை 3ல் கிழக்குத்தெரு ராஜபாண்டி 39, தன்னை வடக்குத்தெரு சர்ச்சின், பிரவீன், மைக்கேல், சுரேஷ் ரஞ்சித், திலகன் ஆகியோர் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார். தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் எழுமலை போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று மறியலில் ஈடுபட்டனர். 30 பெண்களை போலீசார் கைது செய்தனர்.