sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்

/

"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்

"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்

"அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் இது தான்": அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்

48


ADDED : ஜூன் 10, 2024 02:04 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 02:04 PM

48


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது' என மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். இந்திரா தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

மோடிக்கு எதையும் தாங்கும் இதயம்

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜ., பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன் பா.ஜ.,வுக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.

அ.தி.மு.க., தோல்வி

லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. பிரதமர் மோடி எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன். பா.ஜ.,விற்காக நான் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us