ADDED : ஜூன் 19, 2025 02:51 AM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை மாநகராட்சி மத்திய சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.85 லட்சம் மதிப்பிலான 11 கி.மீ., நீளத்திற்கு 59 புதிய ரோடு பணிகளை அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
வார்டு எண் 50ல் ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் பகுதியில் துவக்கவிழா நடந்தது. மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தனர். துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, உதவி கமிஷனர் பிரபாகரன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முத்து, கவுன்சிலர்கள் ஜெயராம், விஜயா, மகாலட்சுமி, ராஜ்பிரதாபன் பங்கேற்றனர்.
