sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மூன்று தலைகள், 18 கரங்களுடன் 10 அடி உயரத்தில் வராஹி சிலை சிவகங்கை கோயிலுக்கு குன்றத்தில் ஏற்பாடு

/

மூன்று தலைகள், 18 கரங்களுடன் 10 அடி உயரத்தில் வராஹி சிலை சிவகங்கை கோயிலுக்கு குன்றத்தில் ஏற்பாடு

மூன்று தலைகள், 18 கரங்களுடன் 10 அடி உயரத்தில் வராஹி சிலை சிவகங்கை கோயிலுக்கு குன்றத்தில் ஏற்பாடு

மூன்று தலைகள், 18 கரங்களுடன் 10 அடி உயரத்தில் வராஹி சிலை சிவகங்கை கோயிலுக்கு குன்றத்தில் ஏற்பாடு


ADDED : செப் 29, 2025 05:33 AM

Google News

ADDED : செப் 29, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : சிவகங்கை சாமியார்பட்டியில் புதிதாக கட்டப்படும் வராஹி கோயிலில் பிரதிஷ்டை செய்ய திருப்பரங்குன்றத்தில் 10 அடி உயரத்தில் பிரமாண்ட வராஹி கற்சிலை தயாராகிறது.

சிலை தயாரிக்கும் திருப்பரங்குன்றம் ஸ்ரீசாஸ்தா சிற்பக்கலைக்கூட உரிமையாளர் அய்யனார் கூறியதாவது: மூன்று முகங்கள், 18 கரங்கள், கரங்களில் சங்கு, சக்கரம், ஏர் கலப்பை, பிரம்பு, மான், அம்பு, வில், திரிசூலம், வாங்கு அரிவாள், கதை, கோடாரி, மணி, மனித தலை, கேடயம் ஆகியவற்றுடன் சிலை உள்ளது. பிரதான வலது கரம் 'அபயம்' நிலையிலும், இடது கரம் 'வரதம்' நிலையிலும் நின்ற கோலத்தில் பின்புறம் குதிரை வாகனத்துடன் 2 அடி உயர பத்ம பீடத்தில், பத்தடி உயரத்தில் ஒரே கல்லில் வராஹி கற்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

பரம்பரை பரம்பரையாக கருங்கற்களால் சுவாமி சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தயாரிக்கும் சுவாமி சிலைகளை கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். தற்சமயம் சிலைகள் தயாரிக்க கருங்கற்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கற்கள் மூலம் சிலைகளை தயாரித்து வருகிறோம். இச்சிலைகள் தயாரிக்கும் வேலையாட்களுக்கும் பற்றாக்குறை இருப்பதால் தொழிலில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்றார்.

இவர் தொடர்புக்கு: 70105 25518..






      Dinamalar
      Follow us