வீடுகளுக்கு முன் கழிவுநீர்
மதுரை முனிச்சலை இஸ்மாயில்புரம் 11வது தெருவில் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதியில் சாக்கடைநீர் செல்கிறது. இதில் குப்பையைக் கொட்டுகின்றனர். இதனால் தொற்று நோய் அபாயத்தில் உள்ளோம். -
-பாஸ்கர், இஸ்மாயில்புரம்
கழிப்பிட வசதி தேவை
ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை, உடைமாற்றும் அறை வசதி இல்லை. இதனால் பக்கதர்கள் அவதிப் படுகின்றனர். கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாரிமுத்து, ராமேஸ்வரம்
பாதசாரிகள் அவதி
மதுரை கீழவாசல் காமராஜர் சிலை அருகே உள்ள பகுதியில் பிளாட்பாரங்களில் மூடைகளை அடுக்கி வைத்திருப்பதால் பாதசாரிகள் செல்ல முடியவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேஷ்பாபு, கீழவாசல்
தெருவிளக்கு எரியவில்லை
மதுரை மாநகராட்சி 71வது வார்டு பொன்மேனி மாடக்குளம் மெயின் ரோடு, வாகேஸ்வரி 2வது தெருவில் விளக்குகள் எரியவில்லை. ரோடு மேடும் பள்ளமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விரைவான நடவடிக்கை தேவை.
-ரவிக்குமார், பொன்மேனி
புதிய சாலையில் பள்ளம்
மதுரை டி.வி.எஸ்., நகர் சத்யசாய் நகர் பகுதியில் புதிய ரோடு அமைத்த சில மாதங்களிலே பள்ளம் உருவாகிவிட்டது. மாநகராட்சியினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
-ஸ்ரீநிவாசன், சத்யசாய் நகர்
நிழற்குடை தேவை
மதுரை கூடல்நகர் வானொலி நிலைய பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைத்துதர வேண்டும். பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பயணிகள் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர்.
- குணசீலன், கூடல்நகர்
தொற்று நோய் அபாயம்
மதுரை மாநகராட்சி 75வது வார்டு ஜெய்ஹிந்துபுரம் மார்கெட் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மார்கெட்டுக்கு செல்ல முடியவில்லை. சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கை தேவை.
-மோகன், சத்யசாய் நகர்
தனி வழித்தடம் தேவை
மதுரையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களை ஒரே வழித்தடத்தில் நிறுத்தி வைப்பதால் பயணிகள் குழப்பமடையும் நிலை உள்ளது. ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சபா, சிம்மக்கல்
நெட்வெர்க் தடையால் அவதி
மதுரை தலைமை தபால் அலுவலகத்தில் அடிக்கடி நெட்வொர்க் கோளாறு ஏற்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
-சங்கர்ராம், பைக்காரா, மதுரை
பள்ளங்களால் விபத்து
மதுரை தெற்குவெளி வீதியில் பெட்ரோல் பங்க் அருகே ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அடிக்கடி விபத்து நடந்து விடுகிறது. பள்ளங்களை மூட வேண்டும்.
- ராமநாதன், மதுரை
டூவீலர்களால் தொல்லை
மதுரை தெற்கு கோபுரம் எதிரே சொக்கப்பநாயக்கர் தெருவில் டூவீலர்களை நிறுத்தி செல்வதால், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் நெரிசலால் முகம் சுளிக்கின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாரிமுத்து, தெற்குவாசல்