/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் விழாவுக்கு தயாராகும் தெப்பம்
/
குன்றத்தில் விழாவுக்கு தயாராகும் தெப்பம்
ADDED : பிப் 03, 2025 05:38 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பிப். 7ல் நடக்கும் திருவிழாவிற்காக தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணி நடக்கிறது.
கோயிலில் ஜன. 29ல் கொடியேற்றத்துடன் துவங்கிய தெப்பத் திருவிழாவில் சுவாமி தினமும் ஒரு வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கிறார். தெப்பத் திருவிழா அன்று ஜி.எஸ்.டி., ரோட்டு பகுதி தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்திருவிழா நடைபெறும்.
அதற்காக தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் தெப்பக்குளம் துாய்மைப்படுத்தப்பட்டு சுற்றுச் சுவர்கள், மைய மண்டபத்தில் சிவப்பு, காவி நிறம் அடிக்கும் பணிகள் நடக்கிறது.

