ADDED : அக் 22, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் பகுதி அ.வல்லாளப்பட்டி பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விவசாயி ரகுபதியின் வயல் பகுதியிலும் நல்லமழை பெய்துள்ளது.
இதையடுத்து அவரது நிலத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் பில்லர் அமைத்து, சிமென்டால் கட்டப்பட்ட கிணறு, மோட்டார் பூமிக்குள் அமிழ்ந்து மூழ்கியது.
இந்தக் கிணறை நம்பி ரகுபதி வாழை, நெல் பயிரிட்டுள்ளார். நிலத்திற்குள் கிணறு மூழ்கியதால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயி ரகுபதியின் எதிர்பார்ப்பு.